வியாசா - ஆத்ம ஞான வித்யாலயம்

வியாசா - ஆத்ம ஞான வித்யாலயம், கிளாசிக்கல் ஹீலிங் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் ஓர் அங்கம். இந்த அறக்கட்டளை 2001ம் ஆண்டு இந்திய அரசில் பதிவு செய்யப்பட்ட ஓர் அறக்கட்டளை (அரசு பதிவு எண் 30/2001) ஆகும்.

உலகை அறிய
அறிவு தேவை!
நான் யார்? என்பதை அறிய
ஞானம் தேவை!!

ஆத்ம ஞானம்
தெய்வீக வாழ்க்கை பயணம்...

இவ் உலகில் வாழும் பொழுதே...
ஆத்ம ஞானம் பெற்று -
ஆத்மாவை உணர்ந்து,
தெய்வீக நற்குணங்களுடன் -
தெய்வீக வாழ்க்கையை வாழ்ந்து,
முக்தியை நோக்கி பயணம் செய்ய உதவும் வாழ்வியல் பயிற்சி வகுப்பு.

ஆத்மா என ஒன்று உள்ளது என நம்புபவர்களும், ஆத்மாவைப் புனிதப்படுத்த விரும்புபவர்களும், "இறை ஒளியுடன் இணைந்து வாழ வேண்டும்" என நினைப்பவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சி வகுப்பு "ஆத்ம ஞானம்" ஆகும்.

இளைஞர்கள், யுவதிகள் அதிகமாக மருந்தில்லாத மருத்துவ துறையில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவும், மாற்று முறை மருத்துவர்கள் தாங்கள் அளித்துவரும் சிகிச்சை முறையுடன், ஆன்மீக விஞ்ஞான சிகிச்சை முறையையும் ....

பயிற்சி வகுப்புகள்

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம் / பிரம்ம ஞானம் / தத்துவ ஞானம் என்பது தன்னை பற்றிய உண்மைகளை உணர்ந்து கொள்வது (ஞானம் என்றால் உணர்தல் என்று பொருள், ஆத்ம ஞானம் என்றால் ஆத்மாவை உணர்தல் என்று பொருள்)

தெய்வீக ஆத்ம சிகிச்சை

இளைஞர்கள், யுவதிகள் அதிகமாக மருந்தில்லாத மருத்துவ துறையில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவும், மாற்று முறை மருத்துவர்கள் தாங்கள் அளித்து வரும் சிகிச்சை முறையுடன், ஆன்மீக விஞ்ஞான சிகிச்சை முறையையும் ....

தெய்வீக குணநலன்களும் -
தெய்வீக வாழ்க்கையும் -
3 மணி நேர பயிற்சி வகுப்பு

இவ்வளவு காலமும் நோய்களிலிருந்து விடுபட, கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபட, நிம்மதி மற்றும் ஆத்ம திருப்தியுடன் பல்வேறு வழி முறைகளையும், பயிற்சி வகுப்புகளையும், பரிகாரங்களையும் வெளியில் தேடி அலைந்திருப்பீர்கள். நீங்கள் தேடும் மற்றும் அடைய விரும்பும் அனைத்தும் உங்கள் குணநலன்களை மாற்றி அமைத்தே உங்களால் வசப்படுத்த முடியும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பயிற்சி வகுப்பு இது.

நீங்கள் உடல், மன ஆரோக்கியத்துடன், நிம்மதியாகவும், திருப்தியாகவும், ஒற்றுமையுடனும், சகோரத்துவத்துடனும், மனிதநேயத்துடனும், விட்டுக்கொடுக்கும் தன்மையுடனும். பேரானந்தத்துடனும், சகலபாக்கியங்களுடனும், பொருளாதார வசதியுடனும், பாதுகாப்பாகவும், பரி பூரணத் தோடும், இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் உயிர்ப்புடன் அனுபவித்து தெய்வீக வாழ்க்கையாக வாழ இப்பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெற இறையருள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

"எண்ணங்கள் அற்ற நிலையே மெளனம்"
மெளனத்தை கடந்த நிலையே ஞானம்"
"ஞானம் என்பதே உயர்ந்த நிலை"
அதுவே யோகியின் நிலை"

ஆத்ம ஞானம்

மஹானாக அவதரித்தாலும், மனிதனாகப் பிறந்தாலும்
கற்று உணர்ந்து, பயிற்சி செய்ய வேண்டிய பாடமுறை
"ஆத்ம ஞானம்" ஆகும்.

உலகில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால்
அது "ஆத்ம ஞானம்" மட்டுமே!
இந்த கல்விஞானத்தை கற்றுக்கொள்ளாத வரையில் நாம் வாழவேண்டிய அற்புதமான தெய்வீக வாழ்க்கையை வாழவோ, அனுபவிக்கவோ முடியாது.

எங்களை பின்தொடரவும்
முகவரி

வியாசானந்த மகரிஷி
பிளாட் எண். G5, தரை தளம்,
பென்வெல்ஸ் பார்க் அபார்ட்மெண்ட்,
பென்வெல்ஸ் சாலை, கண்டோன்மென்ட்,
(அருகில், கண்டோன்மென்ட் காவல் நிலையம், கலை காவேரி கல்லூரி)
திருச்சி - 620 001

தொலைபேசி

+91 63851 96965

+91 97899 22400
மின்னஞ்சல்

info@gurumaharishi.com